இதுவரை 542 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!

Date:

கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 12 வயது தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட ஆயிரத்து 542 சிறுவர்களுக்கு இதுவரை பைஸர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் (01) 150 சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்துசித்த சேனாபதி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதற்கு https://lrh.health.gov.lk/ என்ற இணையத்தில் பிரவேசிப்பதன் ஊடாக நேரம், திகதியை ஒதுக்கிக் கொள்ள முடியும்.இதேவேளை ஃபைசருக்கான பதிவு 12-19 வயதுக்குட்பட்ட மற்றும் குறிப்பிட்ட கொமொர்பிடிட்டிகளுடன் குழந்தைகளுக்கு மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் குழந்தையின் அனைத்து மருத்துவ பதிவுகளையும் கொண்டு வர வேண்டும் என்று கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி கொடுக்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்கு முன்பு அவர்கள் ஒரு ஆலோசகர் குழந்தை மருத்துவரால் மதிப்பீடு செய்யப்படுவார்கள். எனவே தடுப்பூசிக்கு பதிவு செய்வது தடுப்பூசி வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மொனராகலை, நுவரெலியா மாவட்டங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நேற்று காலை ஆரம்பமானது. மாத்தறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. கேகாலை மாவட்டத்தில் 6 சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் 90 சிறுவர்கள் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளனர். தடுப்பூசிகளை சிறுவர்களுக்கு ஏற்றுவதில் பெற்றோர் பெரும் ஆர்வம் கொண்டுள்ளதாக பொலன்னறுவை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...