இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 52 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 04 ஓட்டங்களால் வெற்றி!

Date:

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 52 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்குமிடையிலான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக ஜேசன் ரோய் 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஹர்ஷல் படெல் 33 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந் நிலையில், 142 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாகத் தேவ்தத் படிக்கல் 41 ஓட்டங்களையும், க்ளென் மெக்ஸ்வெல் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உம்ரான் மாலிக் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...