இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 52 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 04 ஓட்டங்களால் வெற்றி!

Date:

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 52 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்குமிடையிலான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக ஜேசன் ரோய் 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஹர்ஷல் படெல் 33 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந் நிலையில், 142 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாகத் தேவ்தத் படிக்கல் 41 ஓட்டங்களையும், க்ளென் மெக்ஸ்வெல் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உம்ரான் மாலிக் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...