பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்படும்!

Date:

கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டதன் மூலம் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களை திறந்து மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்படும் என கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சந்திரிகா விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

20 முதல் 30 வயதிற்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று (11) ஆரம்பிக்கப்பட்டன.பல்கலைக்கழக மாணவர்களில் 11 வீதமானவர்கள் இதுவரை தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் இன்று வழங்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் சைனோபார்ம் தடுப்பூசியை பெற்றுள்ளனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, மாணவர்கள் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...