நேற்றைய (13) தினம் கொவிட் தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
இதுவரையில் நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,429 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.