எனது விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் விசேட அறிக்கை

Date:

முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான அல்ஹாஜ் ரிசார்ட் பதியுதீன் அவர்கள் நேற்று பிணையில் விடுதலையானதை தொடர்ந்து அவர் தன்னுடைய முகநூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்.

இறைவனின் பேரருளால், நேற்றைய தினம் ஆறு மாத கால அநியாயத் தடுப்புக்காவலில் இருந்து நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டேன்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே…!

என்னை அநியாயமாக சிறையில் அடைத்த நாள் முதல், எனது விடுவிப்புக்காக நோன்பு நோற்ற, பிரார்த்தித்த தாய்மார்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

உங்கள் அனைவரது பிரார்த்தனைகளும் வீண்போகவில்லை என்பது, எனது திடமான நம்பிக்கையாகும்.

எனது விடுதலைக்காக குரல் கொடுத்த சகோதர கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், எனது விடுதலைக்காக செயற்பட்ட சட்டத்தரணிகள், சர்வதேச அரங்குகளில் செயற்பட்டவர்கள், ஊடக தர்மத்தை பேணி மனச்சாட்சிப்படி செயற்பட்ட ஊடகவியலாளர்கள். இன, மத, கட்சி வேறுபாடுகள் கடந்து செயற்பட்டவர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்.

எனது விடுவிப்பு என்பது முடிவல்ல…

சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தவர்களாக நமது உடன்பிறப்புக்கள் பலர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அநியாயமாக தடுப்புக்காவலிலும், சிறையிலும் இருக்கின்றனர். அவர்களது விடுதலைக்காகவும் நாம் எல்லோரும் தொடர்ந்தும் பிரார்த்திப்போமாக…

உங்களது நம்பிக்கையையும் அமானிதத்தையும் காப்பாற்றும் வகையில், இன் ஷா அல்லாஹ், எனது குரல் தொடர்ந்தும் ஒலிக்கும். நான் நேசிக்கும் மக்கள் பணி தொடரும்!

ரிஷாட் பதியுதீன்,
தலைவர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,
பாராளுமன்ற உறுப்பினர்.

Popular

More like this
Related

காஸா சிறுவர் நிதியத்திற்கு அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளும் காலம் மே 31 வரை நீடிப்பு

காசாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்...

ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மே தினக் கூட்டங்களை நடத்த தீர்மானம் !

ஐக்கிய மக்கள் சக்தி  இந்த ஆண்டு இரண்டு மே தின பேரணிகளை...

பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!

மே 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சாதாரணத் தர பரீட்சை தொடர்பான...

ஊடகவியலாளர் அசாம் அமீனை பணியில் இருந்து நிறுத்தியதற்காக பிபிசிக்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கையைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் அசாம் அமீனை, ஒப்பந்தம் காலம் நிறைவடைவதற்கு...