மீலாத் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது!

Date:

மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (19) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.இந் நிகழ்வை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

தேசிய மீலாதுன் நபி தின விழாவை முன்னிட்டு நினைவு முத்திரையும், முதல் நாள் உறையும் கௌரவ பிரதமர் தலைமையில் இச் சந்தர்ப்பத்தில் வெளியிடப்பட்டது.

வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ டலஸ் அழகப்பெரும அவர்கள் குறித்த நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறையை கௌரவ பிரதமருக்கு வழங்கினார்.

முஹம்மது நபி ஸல் அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இதன்போது கௌரவ பிரதமரினால் பரிசில்களும் சான்றிதழ்களும் ,
நீதி அமைச்சர் கௌரவ அலி சப்ரி அவர்கள் இதன்போது கௌரவ பிரதமருக்கு நினைவு பரிசொன்றை வழங்கிவைத்தார்.

குறித்த நிகழ்வில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நீதி அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி, தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விகரமநாயக்க, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், மர்ஜான் ஃபலீல், எச்.எச்.எம்.ஹாரிஸ், இஷான் ரஹுமான், நஸீர் அஹமட், அலி சப்ரி ரஹீம் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜேவீர, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஊடக பிரிவு

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...