சவால்களுக்கு மத்தியில் முன்மாதிரியான ஆட்சி தொடரும் என பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

Date:

பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவரை நியமிப்பது தொடர்பாக அரசுக்கும் இராணுவத்திற்குமிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றியதை தொடர்ந்து  நாட்டில் முன்மாதிரியான ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என இம்ரான் கான் உறுதியளித்துள்ளார்.

இந்த முரண்பாட்டை தணிக்கும் வகையில் இராணுவ ஜெனரல் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்களுக்கும் பிரதமர் இம்ரான் கான் பதவி உயர்வு வழங்கியுள்ளார்.ஐ.எஸ்.ஐ தலைவராக ஃபைஸ் ஹமீத் இருந்த நிலையில், அவரின் பதவிக்காலம் முடிந்ததால், நதீம் அகமது என்பவர் தலைவராக நியமிக்கப்படுவதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்திருந்தது

இருப்பினும் நதீம் நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தடுத்து வைத்தது இதனால் இம்ரான் – இராணுவ தளபதி கமர் ஜாவேதுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இப் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் பதவி உயர்வு போன்ற அறிவிப்புகளை இம்ரான் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...