பதுளை மாவட்டத்திற்கான காணி சீர்திருத்த அதிகார சபையின் புதிய கட்டிடம்  திறக்கும் நிகழ்வு

Date:

காணி  சீர்திருத்த  ஆணைக்குழுவின்  பதுளை மாவட்டத்திற்கான காணி சீர்திருத்த அதிகார சபையின் புதிய கட்டிடம்  திறக்கும் நிகழ்வு காணி சீர்திருத்தம் ஆணைக்குழுவின் தலைவர்  வழக்கறிஞர்  நிலாந்த விஜேசிங்க தலைமையில் நேற்று (20)   காணி அமைச்சர்  எஸ். ஏம் . சந்ரசேன அவர்களால் உத்தியோகம் பூர்வமாக  திறந்து  வைக்கப்பட்டது. அத்துடன் அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய  கொள்கையின் அடிப்படையில் 150 காணி உறுதி பத்திரங்கள் மூவின மக்களுக்கும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில்  தொழிலாளர் அமைச்சரும் பதுளை  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ நிமல் சிரிபால டி சில்வா, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு  குழு தலைவருமான கௌரவ டிலான் பெரேரா, கிராமிய பாடசாலை வீதி உட்கட்டமைப்பு இராஜங்க அமைச்சர் கௌரவ தேனுக விதான கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அரவிந்த குமார், கௌரவ சுதர்சன தெனிபிடிய மற்றும் பதுளை மாவட்ட காணி சீர்திருத்த அதிகார சபையின் பணிப்பாளர் நிமல் குமார ஹதரசிங்க ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

(எம்.ஜே.எம்.சஜீத்)

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...