கொவிட் தடுப்பில் முன்னேற்றம்;எதிர்வரும் 31 ஆம் திகதி மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கம்!

Date:

தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.

கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணு தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார் .

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ தளபதி ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை இந் நோய் பரவலில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு பிரஜைக்கும் கடமையாகும் என்பது நினைவூட்டப்பட வேண்டும். 

 

 

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...