T20 Highlights:டுபாய் மண்ணில் வரலாறு படைத்தது பாபர் படை ! இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுக்களால் பாகிஸ்தான் அபார வெற்றி!

Date:

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் மோதின.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.152 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை இலகுவாக அடைந்தது.

பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அணியின் தலைவர் பாபர் அசாம் 68 ஓட்டங்களையும், அணியின் விக்கெட் காப்பாளர் முஹம்மத் ரிஸ்வான் 79 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்கள்.போட்டியின் நாயகனாக அதிரடி பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவிடம் தொடர் தோல்வியை சந்தித்து வந்த பாகிஸ்தானின் வரலாற்றை பாபர் படை மாற்றியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...