நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்க இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தயாராகுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இதேவேளை கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையினை மீளப் பெறுமாறு தெரிவித்து பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நாளைய தினம் (29) தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றினைந்த கூட்டு சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஐயலால் தெரிவித்துள்ளார்.குறித்த போராட்டத்தில் 11 கட்சிகளின் தலைவர்கள் ஈடுபடுவதாக வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.