மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்!

Date:

மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.16,000 பேருந்துகள் மாகாணங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு அமைய சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டு சுவர்ணஹங்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று முதல் ( 31) மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 50% பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்தார்.கடந்த காலத்தை போலவே தனியார் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த ஒரு வருடகாலம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழமையான நேரங்களுக்கு அமைய ( நாளை 01) முதல் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன . எவ்வாறாயினும் அலுவலக புகையிரத சேவைகள் மாத்திரமே சேவையில் ஈடுபடும் எனவும் புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போது சுகாதார வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்றுமாறு பொதுமக்கள் வழியுறுதிப்பட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...