தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பொருளாதார ஆலோசனை சேவைகள் நிலையம் திறந்து வைப்பு

Date:

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பொருளாதார ஆலோசனை சேவைகள் நிலையம் இன்று (01) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவுக்கான ஒன்லைன் இணைய சேவையும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த சேவை நிலையமானது  UNDP மற்றும் அரசசார்பற்ற நிறுவனமான காவியா அமைப்பின் உதவியுடன் இத் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. இச் சேவை நிலையம் ஊடாக சிறு தொழில் அபிவிருத்தி,சந்தைப்படுத்தல், இணைய சந்தைப்படுத்தல் ஆலோசனை,வியாபார கருத்திட்டம் தயாரித்தல், பயிற்சிநெறிகள் உள்ளடங்களாக பல முயற்சியான்மை அபிவிருத்தி சேவைகளை பொது மக்களுக்காக இதன் ஊடாக வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் மக்கள் பலர் சிறு தொழில் முயற்சி வியாபார அபிவிருத்தி ஊடாக நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,காவியா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி யோக மலர் அஜித் குமாரி, சிரேஷ்ட திட்ட உத்தியோகத்தர் க.குகதாசன்,UNDP யின் கருத் திட்ட அதிகாரி குலசேகரம் பார்தீபன் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
ஹஸ்பர் ஏ ஹலீம்_

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...