ஐக்கிய இளைஞர் சக்தியின்  அம்பாறை மாவட்ட எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

Date:

எம்.எஸ்.எம்.ஸாகிர்

ஐக்கிய இளைஞர் சக்தியின் அம்பாறை மாவட்டத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று

நேற்று (02) செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய இளைஞர் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய இளைஞர் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும்,அம்பாறை மாவட்ட செயலாளரும்,அமைப்பாளருமான றிஸ்கான் முகம்மட் ஆகியோருக்கிடையில் இந்தக் கலந்துரையாடல் இடம் பெற்றது.

இக் கலந்துரையாடலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி கல்வி, ஊடகம், விளையாட்டு, கலாசாரம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றையும் றிஸ்கான் முகம்மட், தவிசாளரிடம் கையளித்ததுடன் எதிர்காலத்தில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் இச் செயற்றிட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடினார்.இந் நிகழ்வில், பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஆஷிக் சுபையிரும் கலந்து கொண்டார்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...