டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு!

Date:

நாட்டில் மழையுடன் கூடிய வானிலை நிலவுவதால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் 30 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.அதிலும் மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 68% ஆகும்.டெங்கு நோய் அதிகளவு பதிவாகியுள்ள மாவட்டங்களாக கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக கொவிட் தொற்றுடன் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாத போதிலும் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன் பாடசாலை சூழலை சுத்தம் செய்யுமாறு சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ,விசேட வைத்திய நிபுணர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.இதேவேளை டெங்கு நோயால் இவ்வருடம் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் இந்த வருடத்தில் இதுவரையில் 21,646 நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: நீர் பாதுகாப்பு என்பதில் எந்த சமரசமும் இல்லை – ‘சிவப்புக் கோடு’ என அதிரடி பிரகடனம்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) குறித்து, வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வமத தலைவர்கள்.

தென்கொரியாவின் சர்வதேச மதநல்லிணக்கக் குழுவின் பிரதிநிதிகளும், தர்ம சக்தி அமைப்பின் பிரதிநிதிகளும்...

இலவச பாதணி விநியோகம்: 3,000 ரூபா பெறுமதியான வவுச்சர்களுக்கு அனுமதி!

தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் துறவு...