அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்பட மாட்டார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்படும் என நீதிமன்றத்திடம் அறிவிக்கப்பட்டுள்ளது.