அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சி மேலும் இரு தினங்களுக்கு நீடிப்பு!

Date:

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு 2021ஆம் ஆண்டுக்கான புத்தக கண்காட்சியொன்று அக்கரைப்பற்று மாநகரில் கடந்த 05ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இப் புத்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளரும், ஆய்வாளருமான சிராஜ் மஸுர் தலைமையில் அக்கரைப்பற்று AIMS சர்வதேச பாடசாலையில் தொடர்ந்து நான்கு நாட்களாக இடம்பெற்று வருகிறது.நாளை இறுதி தினமாகும்.

இப் புத்தகக் கண்காட்சியில் பல இலக்கியவாதிகள் உரையாற்றவுள்ளதுடன் பல நூல்களும் வெளியிடப்பட்டன.அத்தோடு அகில இலங்கை ரீதியில் சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப தினத்தில் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளர்களான ஏ.எம் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் யோ . ஜெயச்சந்திரன் ஆகியோர் அதிதிகளாகவும் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் மெளனகுரு விசேட சொற்பொழிவாற்றியதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இரண்டாவது நாளில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ்.நவநீதன் மற்றும் பேராசிரியர் செ .யோகராசா , தென்கிழக்கு பல்கலைக்கழக கலை பீடாதிபதி எம்.எம் பாசில் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் இக் கண்காட்சியில் கலந்து கொண்டிருப்பதை காண முடிகிறது.
இன்றும் நாளையும் (8&9) புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951)...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...