கம்பஹா மாவட்டத்தில் பத்திக் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு!

Date:

(ரிஹ்மி ஹக்கீம்)

பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சினால் கம்பஹா மாவட்டம், தொம்பே தேர்தல் தொகுதியிலுள்ள வானலுவாவ பிரதேசத்தில் பத்திக் பயிற்சி நிலையம் ஒன்று நேற்றைய தினம் (09) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த வேலைத்திட்டமானது தொம்பே பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஜயதிஸ்ஸவின் பூரண மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இப்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற பிரதேசத்தை சேர்ந்த 25 பெண்கள்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக, தொம்பே பிரதேச சபை தவிசாளர் பியசேன காரியப்பெரும உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் தொம்பே பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...