கம்பஹா மாவட்டத்தில் பத்திக் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு!

Date:

(ரிஹ்மி ஹக்கீம்)

பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சினால் கம்பஹா மாவட்டம், தொம்பே தேர்தல் தொகுதியிலுள்ள வானலுவாவ பிரதேசத்தில் பத்திக் பயிற்சி நிலையம் ஒன்று நேற்றைய தினம் (09) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த வேலைத்திட்டமானது தொம்பே பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஜயதிஸ்ஸவின் பூரண மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இப்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற பிரதேசத்தை சேர்ந்த 25 பெண்கள்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக, தொம்பே பிரதேச சபை தவிசாளர் பியசேன காரியப்பெரும உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் தொம்பே பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...