நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு- கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி இன்று இரவு 10 மணி முதல் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இப் பகுதியில் மண்சரிவு அபாயம் நிலவுவதால் குறித்த பகுதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே குறித்த வீதியினூடாக பயணிக்கும் பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.