நாட்டில் டெங்கு நோய் மிக வேகமாக பரவி வருகிறது.இதுவரையில் 15,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இது 47.4% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் 31,162 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் காட்டுகின்றது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக டெங்கு நுளம்பு உருவாகாத வகையில் வீடுகளின் சுற்றுச்சூழல்களை சுத்தமாக வைத்திருக்குமாறு தொற்று நோய் தடுப்பு பிரிவு பொதுமக்களை கோரியுள்ளது.