அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் தலைவர், இன்று 22 பிரதமருடன் சந்திப்பு

Date:

அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் ஆன்மீகத் தலைவர் அதி சங்கைக்குரிய அஷ்-ஷெய்க் அப்லலுல் உலமா கலாநிதி தைக்கா அஹ்மத் நாஸிர் ஆலிம் அவர்கள் இன்று 22 அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.இந்த சந்திப்பின்போது தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணத்துக்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் பிரதமருடைய சேவைகளைப் பாராட்டி விசேட நினைவுச்சின்னமொன்று ஆன்மீகத் தலைவரினால் வளங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் தலைவராக பதவி ஏற்று இலங்கைக்கு முதல் தடவையாக தனது உத்துயோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டதை முன்னிட்டு பிரதமரினால் ஆன்மீகத் தலைவருக்கு நினைவுச்சின்னமொன்றை வழங்கி கௌரவித்தடுடன் பிரதமர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

மேலும்,பிரதமரின் பெளத்த மத மற்றும் கலாசார விவகார இணைப்பாளரான கலாநிதி அக்ரஹரே கஸ்ஸப்ப நாயக தேரர், பிரதமரின் இனைப்புச் செயளாலர் அல்-ஹாஜ் பர்ஸான் மன்ஸுர்,
ஏற்பாட்டுக்குழு தலைவர் அல்-ஹாஜ் மொஹிதீன் காதர்,மற்றும் ஏற்பாட்டுக்குழு  ஒருங்கினைப்பாளர் அல்-ஹாஜ் முய்னுதீன் பின் மொஹமட் ஆகியோரும் இந்த சந்திப்பின்போது கலந்து கொண்டனர்.

உத்தியோகபூர்வ ஊடக அனுசரணை NEWSNOW Media Unit

Popular

More like this
Related

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...