பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம்!

Date:

பன்னிப்பிட்டிய – கொட்டாவ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

வெடிப்பு சம்பவத்தில் குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.எனினும் இந்த சம்பவத்தில் வீட்டில் உள்ளவர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டில் பல்வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வெலிகம கப்பரதொட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூவர் காயமடைந்தனர் . நவம்பர் 16 ஆம் திகதி இரத்தினபுரியில் உள்ள உணவகம் ஒன்றில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும் , விசாரணைகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையே சம்பவத்திற்கு காரணம் எனத் தெரிய வந்தது, நவம்பர் 20 ஆம் திகதி கொழும்பிலுள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் சிறு காயங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...