நியூயோர்க் ஐ நா சபையிலிருந்து வருகை தந்துள்ள அதன் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்குரிய அரசியல் மற்றும் சமாதான விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் காலித் ஹையரி, மற்றும் இலங்கைக்கான ஐ நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் உள்ளிட்ட தூதுக்குழுவினர், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை, நேற்று (24) ஷங்கரிலா ஹோட்டலில் சந்தித்துள்ளனர்.
இதன் போது முஸ்லிம் சமூகம் சமகாலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அரசியல் சூழ்நிலை என்பன தொடர்பில் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.