குவைத் நாட்டின் நன்கொடையில் வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையின் கொரோனா நோயாளர் பிரிவுக்கு வைத்திய உபகரணங்கள்!

Date:

குவைத் நாட்டின் Islamic care society இன் அனுசரணையில், கஹட்டோவிட்ட அல் ஹிமா இஸ்லாமிய சேவை நிறுவனத்தின் ஒருங்கிணைப்பிலும் வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையின் கொரோனா நோயாளர் பராமரிப்புக்கு மிக முக்கியமான தேவையாக காணப்பட்ட திரவ ஒக்சிசன் தேவைப்பாட்டை வைத்தியசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க 90இலட்சம் பெறுமதியான 3000லீட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஒக்சிசன் தாங்கியை கையளிக்கும் நிகழ்வு நேற்று (27) நடைபெற்றது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ இலங்கைக்கான குவைத் நாட்டின் தூதுவர் கலப் எம் புதைர் அவர்கள் அல் ஹிமா இஸ்லாமிய சேவை நிறுவனத்தின் தலைவர் அல் ஹாஜ் நூருள்ளாஹ் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதுடன் இந்த திரவ ஒக்சிசன் தாங்கி கையளிப்பை அல் ஹிமா இஸ்லாமிய சேவை நிறுவனத்தின் தலைவர் அல் ஹாஜ் நூருள்ளாஹ் அவர்களால் வைத்தியசாலை நிர்வாகத்தின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் சுப்ரீண்டன் எம் சிராஜ் அவர்களிப்பதையும் விசேட அதிதிகளை வரவேற்பதையும் , கையளிப்பு நிகழ்வில் அதிதிகள் உரை நிகழ்த்துவதையும் படங்களில் காணலாம்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...