பார்படாஸ் தீவு குடியரசு நாடாக மலர்ந்தது!

Date:

கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள பார்படாஸ், குடியரசு நாடாக மலர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 400 ஆண்டுகள், இங்கிலாந்தின் ஆளுகையில் இருந்த இந்த குட்டித் தீவு, 1966-ல் சுதந்திரம் பெற்றாலும், எலிசபெத் ராணியே அந்நாட்டின் தலைவராக நீடித்தார். அந்த முறையை மாற்றி, பார்படாஸ் சுதந்திர குடியரசாக மாறுவதாக, நாட்டின் முதல் அதிபரான சாண்ட்ரா மேசன் அறிவித்தார். தலைநகர் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இதற்கான விழா, பார்படாஸ் நாட்டின் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன், உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது.

இந் நிகழ்ச்சியில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பார்படாஸ் நாட்டின் அரசியல் சட்டம் மாறினாலும், இரு நாடுகள் இடையே நட்புறவு தொடரும், குறிப்பிட்டார். 54 நாடுகளை கொண்ட காமன்வெல்த் அமைப்பின் உறுப்பினராகவும் பார்படாஸ் தொடரும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2021/11/29/barbados-set-to-become-a-republic-ditching-british-queen&ved=2ahUKEwim6vW7ysD0AhUaSmwGHdtpBiAQFnoECEMQAQ&usg=AOvVaw2Qr1Dq1XMzR7f6QIwcDkNa&ampcf=1

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...