பார்படாஸ் தீவு குடியரசு நாடாக மலர்ந்தது!

Date:

கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள பார்படாஸ், குடியரசு நாடாக மலர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 400 ஆண்டுகள், இங்கிலாந்தின் ஆளுகையில் இருந்த இந்த குட்டித் தீவு, 1966-ல் சுதந்திரம் பெற்றாலும், எலிசபெத் ராணியே அந்நாட்டின் தலைவராக நீடித்தார். அந்த முறையை மாற்றி, பார்படாஸ் சுதந்திர குடியரசாக மாறுவதாக, நாட்டின் முதல் அதிபரான சாண்ட்ரா மேசன் அறிவித்தார். தலைநகர் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இதற்கான விழா, பார்படாஸ் நாட்டின் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன், உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது.

இந் நிகழ்ச்சியில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பார்படாஸ் நாட்டின் அரசியல் சட்டம் மாறினாலும், இரு நாடுகள் இடையே நட்புறவு தொடரும், குறிப்பிட்டார். 54 நாடுகளை கொண்ட காமன்வெல்த் அமைப்பின் உறுப்பினராகவும் பார்படாஸ் தொடரும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2021/11/29/barbados-set-to-become-a-republic-ditching-british-queen&ved=2ahUKEwim6vW7ysD0AhUaSmwGHdtpBiAQFnoECEMQAQ&usg=AOvVaw2Qr1Dq1XMzR7f6QIwcDkNa&ampcf=1

Popular

More like this
Related

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...