பார்படாஸ் தீவு குடியரசு நாடாக மலர்ந்தது!

Date:

கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள பார்படாஸ், குடியரசு நாடாக மலர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 400 ஆண்டுகள், இங்கிலாந்தின் ஆளுகையில் இருந்த இந்த குட்டித் தீவு, 1966-ல் சுதந்திரம் பெற்றாலும், எலிசபெத் ராணியே அந்நாட்டின் தலைவராக நீடித்தார். அந்த முறையை மாற்றி, பார்படாஸ் சுதந்திர குடியரசாக மாறுவதாக, நாட்டின் முதல் அதிபரான சாண்ட்ரா மேசன் அறிவித்தார். தலைநகர் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இதற்கான விழா, பார்படாஸ் நாட்டின் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன், உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது.

இந் நிகழ்ச்சியில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பார்படாஸ் நாட்டின் அரசியல் சட்டம் மாறினாலும், இரு நாடுகள் இடையே நட்புறவு தொடரும், குறிப்பிட்டார். 54 நாடுகளை கொண்ட காமன்வெல்த் அமைப்பின் உறுப்பினராகவும் பார்படாஸ் தொடரும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2021/11/29/barbados-set-to-become-a-republic-ditching-british-queen&ved=2ahUKEwim6vW7ysD0AhUaSmwGHdtpBiAQFnoECEMQAQ&usg=AOvVaw2Qr1Dq1XMzR7f6QIwcDkNa&ampcf=1

Popular

More like this
Related

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...

கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி வரலாற்றில் முக்கிய மைல்கல்: 9 மாடிக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

இலங்கையின் முதலாவது முஸ்லிம் ஆண்கள் பாடசாலையாக 1884 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் மஜீட் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட...

Colombo Marathon போட்டிக்கான பதிவுகள் ஆரம்பம்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஏற்பாடு செய்யும் Colombo...