ட்விட்டரின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி பராக் அகர்வால் நியமனம்!

Date:

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ஜேக் டோர்சி பதவி விலகியுள்ள நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை ஐ.ஐ.டியில் படித்த அகர்வால், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். 2011ல் ட்விட்டர் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த அவருக்கு, தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், பராக் அகர்வால் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதாக ட்விட்டர் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே, பதவியை ராஜினாமா செய்துள்ள டோர்சி, அகர்வாலை ட்விட்டர் தலைமைப் பொறுப்புக்குத் தேர்வு செய்திருப்பது சிறந்த முடிவு என்று பாராட்டியுள்ளார். அந் நிறுவனத்தை விட்டு டோர்சி வெளியேற முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.tribuneindia.com/news/business/indian-origin-executive-parag-agrawal-is-new-ceo-of-twitter-after-jack-dorsey-steps-down-344284&ved=2ahukewicql703cd0ahvzugwghrstb3sqfnoecgiqaq&usg=aovvaw074mi7mtf_0klf47ugqx34&ampcf=

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...