துருக்கியில் மணிக்கு 129 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி; இதுவரை 4 பேர் பலி!

Date:

துருக்கியின்  இஸ்தான்புல் நகரில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக கடல்கா மாவட்டத்தில் மணிக்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றில், பிரம்மாண்ட மணிக்கூண்டு ஒன்று இடிந்து விழுந்ததாகவும் மணிக்கூண்டு அருகே யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. புயலில் வணிக வளாகம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் சுமார் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதோடு 4 பேர் பலியானார்கள்.

அதேசமயம் மற்றொரு இடத்தில் சாலையோரம் இருந்த தகரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. புயலின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான சூறாவளியால் இதுவரையில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே மத்திய கடற்பகுதி மற்றும் கருங்கடல் பகுதியில் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணொளி இணைப்பு

https://www.instagram.com/reel/CW5TL4Spc_p/?utm_medium=copy_link

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...