ஸம் ஸம் நிறுவனத்தின் அனுசரணையில் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம்!

Date:

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மேம்மடுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை மத்திய மாகாண கல்வித் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

ELAP (Emergency Learning Assistance programme) எனும் இத் திட்டத்தின் முதலாவது கட்டமாக 21 நிலையங்களில் 1050 மாணவர்களுக்குபரிட்சையில் சித்தியடைய விஷேட பயிற்சி வழங்கும் இந்த திட்டத்திற்கு ஸம் ஸம் நிறுவனம் அனுசரணை வழங்குகிறது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 25 ஆம் திகதி வியாழக்கிழமை மத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கைச்சாத்திடப்பட்டது. இந் நிகழ்வில் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. அமரசிறி பியதாச,மேலதிக கல்விப் பணிப்பாளர்கள், ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவர் முப்தி.யூசுப் ஹனிபா மற்றும் ஸம் ஸம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸம் ஸம் நிறுவனமானது இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் கல்வி, சமூக நல்லிணக்கம், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய பகுதிகளில் “மதங்களைக் கடந்த மனிதநேயம்” என்ற கருப்பொருளின் கீழ் இயங்கும் பதிவு செய்யப்பட்ட இலங்கை சமூக சேவைகள் அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...