தென்கிழக்குப் பல்கலையில் விஞ்ஞான ஆராய்ச்சி மாநாடு!

Date:

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் சம்மாந்துறையில் அமைந்திருக்கும்; பிரயோக விஞ்ஞான பீடத்தில் “நிலையான கண்டுபிடிப்புகளுக்கான தரவு சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி” எனும் தொனிப்பொருளில் பத்தாவது வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி மாநாடு, பீடத்தின் கேட்போர் கூடத்தில் Zoom தொழினுட்பத்தினூடாகவும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பீடாதிபதி கலாநிதி யூ.எல். செய்னுடீன் தலைமையில் (30) இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டு உரையாற்றிய அதேவேளை, ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய நூலை ஏற்பாட்டுக்குழுவினர் சூழ, பீடாதிபதி உபவேந்தருக்கு வழங்கிவைத்தார். நிகழ்வின் ஏற்பாட்டாளர் கலாநிதி எம். சி. அலி பூட்டோவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம பேச்சாளரான LIRNEasia நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ரோஹான் சமரஜீவாவை அறிமுகம் செய்துவைத்தார்.

பின்னர் “நிலையான கண்டுபிடிப்புகளுக்கான தரவு சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி” (“Data-Driven Scientific Research for Sustainable Innovations”) எனும் தலைப்பில் பேராசிரியர் ரோஹான் சமரஜீவா தனது பிரதான உரையை நிகழ்த்தினார். குறித்த விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் 8அமர்வுகளில் 44 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. முதல் அமர்வின் இறுதியில் விழாக்குழுச் செயலாளர் கலாநிதி பி.வி.எச்.கே.ரணசிங்க நன்றியுரை நிகழ்த்தினார்.

இரண்டாவது அமர்வின்போது சிறப்புப் பேச்சாளரான ஜப்பான் Hokkaido பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் கலாநிதி டபிள்யு.எம்.சி.சமீரவை கலாநிதி பி.வி.எச்.கே.ரணசிங்க அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் துணைப் பேராசிரியர் கலாநிதி டபிள்யு.எம்.சி.சமீர தனது சிறப்புரையை நிகழ்த்தினார். நிகழ்வில் கட்டுரையாளர்கள் Zoom தொழினுட்பத்தினூடாக கலந்துகொண்ட அதேவேளை உபவேந்தர், பீடாதிபதி, நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட பிரதி நூலகர் மற்றும் விரிவுரையாளர்கள் என பலரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.

நூருல் ஹுதா உமர்

 

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...