கிண்ணியா குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கிண்ணியா வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி படகு விபத்தில் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.