சாய்ந்தமருது அல் – ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்ற கௌரவிக்கும் நிகழ்வு. 

Date:

சாய்ந்தமருது அல் – ஹிலால் வித்தியாலயத்தில் ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்‌.ஏ.மஜீதின் ஓய்வு நிலையைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு  மற்றும் வித்தியாலயத்திலிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்ற முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். பைசாலை கௌரவிக்கும் நிகழ்வும் மிகச் சிறப்பான முறையில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் யு.எல். நஸார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். சாகிர் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை கல்வி வலய கணக்காளர் ஹபிபுல்லா, விசேட அதிதியாக முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீதின் புதல்வர் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஸ்லம் சஜா மற்றும் வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பிரதி அதிபர் றிப்கா அன்ஸார், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள்,  ஆசிரியைகள் உட்பட மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...