போலாந்து மற்றும் இலங்கைக்கிடையிலான நேரடி விமான சேவை ஆரம்பம்!

Date:

போலாந்து மற்றும் இலங்கைக்கிடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய போலாந்தின் ஒர்சோ நகரத்தின் செப்பின் சர்வதேச விமான Warsaw Chopin Airport நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் நேற்று (08) அதிகாலை 5.35 மணிக்கு இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்த விமானத்தில் 230 பயணிகள் பயணித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையில் இந்த விமான சேவை இலங்கை மற்றும் போலாந்துக்கிடையில் இடம்பெறவுள்ளது.இதேவேளை இந்த விமான சேவையின் மூலம் மேற்கு ஐரோப்பா ஸ்கன்டிநேவியா நாடுகள், போல்டிக் நாடுகள் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய விமான பயணிகள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு நடைபெறும். அதாவது செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள்...

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. அறிக்கை

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய...

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு!

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பதவியேற்கிறாா். பங்களாதேஷ்...

கொழும்பு-புத்தளம் ரயில் பாதை முழுமையாக திறப்பு!

கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று (16) அதிகாலை முழுமையாக...