சதொச விற்பனையகங்களில் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள்!

Date:

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (12) முதல் மாதம் இறுதி வரையில் சதொச விற்பனையகங்களில் சில வகையான அரிசிகளை 100 ரூபாவுக்கு குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சதொச வர்த்தக நிலையங்களில் 50 அத்தியாவசிய பொருட்களை இன்று (12) முதல் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என்று நேற்று (11) ஊடக சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

நாடு அரிசி 1Kg – 99 ரூபா 50 சதத்திற்கும் , சம்பா அரிசி 1Kg – 130 ரூபாவிற்கு சதொச விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.எந்த அரிசி வகைகளையும் தலா 5 kg அளவில் பெற்றுக் கொள்ள முடியும்.சீனி 1Kg 125 ரூபாவுக்கும் , பருப்பு 1Kg 240 ரூபாவுக்கும் , நூடில்ஸ் 125 ரூபாவுக்கும் ,சவர்க்காரம் உள்ளிட்ட 50 பொருட்களை சந்தையில் நிலவும் விலையை விடவும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...