லெபனான் நாட்டில் உள்ள பாலஸ்தீன அகதி முகாமில் வெடிப்பு சம்பவம் ; இதுவரையில் 12 பேர் பலி!

Date:

லெபனான் நாட்டில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் இருந்த ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் உள்ள ஒரு சில பாலஸ்தீன முகாம்கள், ஹமாஸ் அல்லது ஃபத்தாஹ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ளன.

துறைமுக நகரான டயரில் உள்ள அகதிகள் முகாமில், டீசல் டேங்கர் லாரி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அருகில் இருந்த பள்ளிக்கு பரவியது. அந்த பள்ளியை ஹமாஸ் அமைப்பினர் ஆயுத கிடங்காக பயன்படுத்தி வந்ததால், அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதுவரையில் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொவிட் தொற்று நோயை கட்டுப்படுத்த சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒக்சிஜன் சிலிண்டர்கள் பற்றியதால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக பலஸ்தீன ஊடகமான ஷெஹாப் செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.aljazeera.com/news/2021/12/10/explosion-south-lebanon-palestinian-camp

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...