கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச வானொலி விருது பெற்றுக் கொண்ட இலங்கை வானொலி பிறை எப்.எம்.வானொலி அறிவிப்பாளரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

Date:

இவ்வாண்டுக்கான கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச வானொலி விருது  பெற்றுக் கொண்ட இலங்கை வானொலி  பிறை எப்.எம்.வானொலி அறிவிப்பாளரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கவிதாலய கலை இலக்கிய மண்டல பேரவையின் ஏற்பாட்டில்  இடம்பெற்றது.
கவிதாலய கலை இலக்கிய மண்டல பேரவையின் தலைவர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் தலைமையில்  இன்று(14) அட்டாளைச்சேனை கவிதாலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது அரச உயரதிகாரிகள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், துறைசார் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது இம்முறை அரச வானொலி விருதினைப் பெற்றுக் கொண்ட அறிவிப்பாளர், ஆசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.றமீஸ் பொன்னாடை போர்த்தப்பட்டு பாராட்டி நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இலங்கையின் வானொலி ஊடகத்துறையில் ஈடுபட்டிருக்கும் கலைஞர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட அரச வானொலி விருது விழா-2021 அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவின்போது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம். வானொலியில் சேவையாற்றி வரும் அறிவிப்பாளர் எம்.ஏ.றமீஸ் சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக தெரிவு செய்யப்பட்டடு  இவ்வாறு தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(எம்.ஜே.எம்.சஜீத்)

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...