மத்திய வங்கியின் தீர்மானத்துக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் மனு தாக்கல்!

Date:

வங்கி கணக்குகளினூடாக நாட்டுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியை இலங்கை ரூபாவாக மாற்றுவதை கட்டாயமாக்கி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் (BASL) இன்று (14) மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகளின் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் குறித்த சங்கத்தின் பிரதி தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ் மனுவின் பிரதிவாதிகளாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், மத்திய வங்கியின் நாணய சபை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வங்கி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...