வைத்தியர் ஷாஃபியை மீண்டும் பணியில் அமர்த்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை!

Date:

வைத்தியர் ஷாஃபியை மீண்டும் பணியில் அமர்த்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்ததாக போலி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனுக்கு வழங்க வேண்டிய நிலைவை கொடுப்பனவை வழங்கி மீண்டும் பணியில் அமர்த்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச் முணசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் ,தாபன சட்ட விதிகளின் படி அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறும் , அவர் கட்டாய விடுமுறையில் இருந்த காலப்பகுதிக்கான கொடுப்பனவை மீள செலுத்துமாறு கோரியுள்ளார்.

கருத்தடை சத்திர சிகிச்சை விவகாரத்தில் கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளான முஹம்மத் ஷாஃபி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.எனினும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

“வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்”  நூல் வெளியீட்டு நிகழ்வு

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய இலங்கை வக்பு நியாய சபையின்...

கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய...

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி மஹிந்த பராக்கிரம...

இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாம்மி!

இங்கிலாந்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம்...