கண்டி எனசல் கொல்ல மத்திய கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு 2022ம் ஆண்டுக்காக அச்சிடப்பட்டுள்ள கலண்டர் வெளியீட்டு வைபவம்!

Date:

கண்டி எனசல் கொல்ல மத்திய கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு 2022ம் ஆண்டுக்காக அச்சிடப்பட்டுள்ள கலண்டர் வெளியீட்டு வைபவமும், கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் நேற்று (15) புதன்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் 1998ம் வருட மாணவர்களின் அனுசரணையுடன் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக தெல்தோட்டை பிரதேச செயலாளர் சட்டத்தரணி திருமதி ஆத்மா திலுக்ஷி ஜயரத்ன கலந்து கொண்டார்.

2022ம் ஆண்டுக்காக அச்சிடப்பட்ட கலண்டர்களின் முதற் பிரதிகளை பிரதம அதிதியின் கரங்களால் பிரதேசத்தின் ஏனைய பாடசாலை அதிபர்கள் பெற்றுக் கொண்டனர். மேலும், கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தை பிரதம அதிதியாக கலந்து கொண்ட தெல்தோட்டை பிரதேச செயலாளர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...