உத்தரா தேவி அதிவேக புகையிரதம்  காருடன் மோதியது; ஒருவர் உயிரிழப்பு!

Date:

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதம் வனவாசலை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் இன்று ( 01) மதியம் 12.45 மணியளவில் காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.கார் தீப்பிடித்து எரிந்ததால் கார் பலத்த சேதம் அடைந்துள்ளதோடு. தீயினால் புகையிரத இயந்திரங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வனவாசல, திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச் சம்பவத்தால் புகையிரதத்தில் பயணம் செய்த பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...