நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட “யாசஸ்ஸி பியச” கட்டிடம் மாணவர்களிடம் கையளிப்பு!

Date:

அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஒவ்வொரு நேரத்திற்கு வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் அரசாங்கத்தில் ஒருவர் இராஜினாமா செய்யப்போவதாக கூறுகின்றனர்.ஆனால் உண்மையில் செய்ய வேண்டியது முழு அரசாங்கமும் விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பிரதானிகள் மற்றவர்கள் மீது விரல் நீட்டி தவறுகளை மற்றவர்கள் மீது சுமத்தி தான் நல்லவர் என காண்பிக்க முயற்சிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இந்த நாட்டை அதள பாதாளத்தை நோக்கி தள்ளியதன் பொறுப்பை தனி நபர்களன்றி முழு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.இவர்கள் அனைவரும் நாட்டுக்கு இழைத்தது கூட்டு அழிவாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், போலியானவர்களை வெற்றி பெற செய்ததன் விளைவை முழு நாடும் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,கொழும்பு மத்திய தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மானின் 4.4 மில்லியனுக்கும் அதிகமான நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட கெத்தாராம ஸ்ரீ சித்தார்த்த அறநெறி பாடசாலையின் “யசஸ்ஸி பியஸ” கட்டிடத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (02) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

கெத்தாராம ஸ்ரீ சித்தார்த்த அறநெறி பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் மற்றும் பிரதேசவாசிகளின் வேண்டுகோளுக்கிணங்க,கெத்தாராம விகாரையின் பிரதம தலைமை தேரர் சங்கைக்குரிய வெலடகொட யசஸ்ஸி தேரரின் உன்னத எண்ணக்கருவின் பிரகாரமும் பூரண பங்களிப்பின் பேரிலும் இந்தக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1935 ஆம் நிர்மானக்கப்பட்ட குறித்த விகாரையின் அபிவிருத்திப் பனிகள் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டதோடு,நீண்ட காலங்களுக்குப் பிறகு எத்தகைய கவனிப்புகளும் அற்று இருந்து குறித்த விகாரகையின் அபிவிருத்திப் பனிகளுக்கு கௌரவ பாராளுமன்ற முஜிபுர் ரஹ்மான் அவர்களின் அதிக நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டமையை தலைமை தேரர் சங்கைக்குரிய வெலடகொட யசஸ்ஸி தேரர் பெரிதும் பாராட்டியதோடு,இன ஒற்றுமைக்கான தேவையையும் வலியுறுத்தினார்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...