நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட “யாசஸ்ஸி பியச” கட்டிடம் மாணவர்களிடம் கையளிப்பு!

Date:

அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஒவ்வொரு நேரத்திற்கு வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் அரசாங்கத்தில் ஒருவர் இராஜினாமா செய்யப்போவதாக கூறுகின்றனர்.ஆனால் உண்மையில் செய்ய வேண்டியது முழு அரசாங்கமும் விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பிரதானிகள் மற்றவர்கள் மீது விரல் நீட்டி தவறுகளை மற்றவர்கள் மீது சுமத்தி தான் நல்லவர் என காண்பிக்க முயற்சிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இந்த நாட்டை அதள பாதாளத்தை நோக்கி தள்ளியதன் பொறுப்பை தனி நபர்களன்றி முழு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.இவர்கள் அனைவரும் நாட்டுக்கு இழைத்தது கூட்டு அழிவாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், போலியானவர்களை வெற்றி பெற செய்ததன் விளைவை முழு நாடும் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,கொழும்பு மத்திய தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மானின் 4.4 மில்லியனுக்கும் அதிகமான நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட கெத்தாராம ஸ்ரீ சித்தார்த்த அறநெறி பாடசாலையின் “யசஸ்ஸி பியஸ” கட்டிடத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (02) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

கெத்தாராம ஸ்ரீ சித்தார்த்த அறநெறி பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் மற்றும் பிரதேசவாசிகளின் வேண்டுகோளுக்கிணங்க,கெத்தாராம விகாரையின் பிரதம தலைமை தேரர் சங்கைக்குரிய வெலடகொட யசஸ்ஸி தேரரின் உன்னத எண்ணக்கருவின் பிரகாரமும் பூரண பங்களிப்பின் பேரிலும் இந்தக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1935 ஆம் நிர்மானக்கப்பட்ட குறித்த விகாரையின் அபிவிருத்திப் பனிகள் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டதோடு,நீண்ட காலங்களுக்குப் பிறகு எத்தகைய கவனிப்புகளும் அற்று இருந்து குறித்த விகாரகையின் அபிவிருத்திப் பனிகளுக்கு கௌரவ பாராளுமன்ற முஜிபுர் ரஹ்மான் அவர்களின் அதிக நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டமையை தலைமை தேரர் சங்கைக்குரிய வெலடகொட யசஸ்ஸி தேரர் பெரிதும் பாராட்டியதோடு,இன ஒற்றுமைக்கான தேவையையும் வலியுறுத்தினார்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...