தாய்வானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹுயலியென் நகரத்திற்கு கிழக்கே 56 கி.மீட்டர் தூரத்தில் நேற்று (03) 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து 19 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுடிருந்தது.19 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததால், கட்டிடங்கள் குலுங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரபரப்பான காலை நேரம் நிலநடுக்கம் ஏற்பட்டதாலும், 20 வினாடிகள் கட்டிடங்கள் குலுங்கியதாலும் மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் வெளியாகவில்லை. 2018 ஆம் ஆண்டு இதே பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயம் அடைந்தனர் .