நாளை மறுதினம் கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்!

Date:

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மறுதினம் (08) 16 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அவசர திருத்த பணிகள் காரணமாக நாளை மறுதினம் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் இந்த நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என குறித்த சபை அறிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு தெஹிவளை, கல்கிசை ,கோட்டை மற்றும் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது .இது தவிர கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுதினம் 16 மணி நேரம் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...