கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற எரிவாயு விபத்தை உறுதிப்படுத்திய பொலிஸார்! 

Date:

கடந்த திங்கட்கிழமை (03) கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் எரிவாயு தொடர்பான வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தி மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதம சமயலறையில் ஏற்பட்ட வாயுக் கசிவே வெடிப்பிற்குக் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டங்கன் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எரிவாயு சிலிண்டரின் குமிழ் சரியாக மூடப்படவில்லை என்று கூறிய அவர், அதனால் எரிவாயு கசிவு ஏற்பட்டதாகவும், சமையல்காரர் அடுப்பை அணைத்ததால் திடீரென தீப்பற்றியதாகவும் கூறினார்.

திடீரென பரவிய தீயினால் சமையல்காரரின் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் வெடிப்பு ஏற்படவில்லை என்றும் OIC டங்கன் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

தீக்காயங்களுக்கு உள்ளான சமையல்காரர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் வெளியேறினார் என்று அவர் மேலும் கூறினார்.ஹோட்டலின் சமையலறையில் காற்றோட்டத்திற்கான ஜன்னல்களோ அல்லது காற்று சுழற்சியோ இல்லை என்பது விசாரணைகளின் போது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...