ரியாத் – சவூதி அரேபியாவின் மூத்த, மற்றும் மதிப்புமிக்க மார்க்க அறிஞரான கலாநிதி ஷைக் ஷாலிஹ் அல்-லுஹைதான் நேற்று புதன்கிழமை (05) காலமானார்.
நீண்ட காலமாக நோயுற்றிருந்த அவரது மரணச் செய்தியை நேற்று புதன்கிழமை அதிகாலை குடும்பத்தினர் ட்விட்டரில் உறுதிப்படுத்தினர்.
90 வயதான ஷைக் அல்-லுஹைதான் அல்-கசீம் பிராந்தியத்திலுள்ள புகைரியா நகரில் பிறந்தார்.மேலும் முஸ்லீம் உலக லீக்கின் உறுப்பினர், மூத்த அறிஞர்கள் கவுன்சில் உறுப்பினர் உட்பட பல பதவிகளை வகித்தார். மற்றும் உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.
ட்விட்டரில், அவரது பெயர் ஹேஷ்டேக் செய்யப் பட்டு, அவருக்கான பிரார்த்தனைகளும் அனுதாபங்களும் குவிந்தன.
கலாநிதி. அல்-லுஹைதான் மக்காவின் பெரிய பள்ளிவாசலிருந்து பிரசங்கங்களையும் வழங்கி வந்ததோடு ஒரு இஸ்லாமிய பத்திரிகையின் வெளியீட்டாளராகவும் இருந்தார். மறைந்த அறிஞரின் ஜனாஸா ரியாத்திலுள்ள அல் ராஜ்ஹி பள்ளிவாசலில் பல்லாயிரம் பேர் முன்னிலையில் தொழுகை நடத்தப் பட்டு,நல்லடக்கம் செய்யப்பட்டது.அன்னாரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!