அரபுக் கல்லூரிகள் விடயத்தில் அரசின் புதிய கட்டுப்பாடுகள்- முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சுற்றுநிருபம்!

Date:

அரபுக் கல்லூரிகளினால் வழங்கப்படும் ஆவணங்கள் இலங்கையின் அரசகரும மொழிகளான சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அமையப் பெற்றிருக்க வேண்டுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அரபுக்கல்லூரிகளின் நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் Diploma, Higher Diploma, Higher Studies, Higher Education, Degree, Licentiate போன்ற வாசகங்கள் இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் அடிப்படையில் மாத்திரமே பயன்படுத்தப்படுவதால், குறிப்பிட்ட வாசகங்கள் மத்ரஸாவினால் வழங்கப்படும் ஆவணங்களில் உள்ளடங்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளது.

இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் அரபுக் கல்லூரிகளுக்கு MRCA/R/08/01/01 எனும் இலக்க சுற்று நிருபம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

சுற்றுநிருபத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரபுக்கல்லூரிகளினால் வழங்கப்படும் ஆவணங்கள் உரிய விதிமுறைகளுக்கு உட்படாவிட்டால் திணைக்களத்தினால் அவ் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள் உறுதிப்படுத்தப்பட மாட்டாது.

கல்லூரியினால் வழங்கப்படும் சான்றிதழ்களில் ஒப்பமிடுபவர்கள் தொடர்பான பெயர், பதவி மற்றும் மாதிரி ஒப்பங்கள் திணைக்களத்திற்கு வழங்கப்பட வேண்டும். மாற்றங்கள் ஏற்படும் போது அவ்வவ்போது அறிவிக்க வேண்டும்.

கல்லூரியினால் தயாரிக்கப்படும் சான்றிதழ்களின் பிரதி ஒன்றினை மாதிரி சான்றிதழ் எனக் குறிப்பிட்டு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். சான்றிதழ்களின் மாதிரிகள் மாற்றப்படுமாயின் திணைக்களத்துக்கு அறிவிக்க வேண்டும்.

கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரை பட்டம் பெற்றவர்களின் முழுப்பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்ற தகவல்கள் ஆண்டின் அடிப்படையில் கல்லூரியினால் சான்று படுத்தி திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

கல்லூரியினால் வழங்கப்படும் பட்டத்தின் தன்மை சான்றிதழில் (மௌலவி சான்றிதழ்/ ஹிப்லு சான்றிதழ்) என்று தெளிவாக குறிப்பிடப்படல் வேண்டும்.கல்லூரியில் கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தின் பிரதியொன்று திணைக்களத்திற்கு வழங்கப்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதாக பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...