கொழும்பு துறைமுக நகர நடை பாதை இன்று திறந்து வைக்கப்பட்டது!

Date:

கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று (09) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த நடைபாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். 500 மீட்டர் தூரத்துக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர நடைபாதையை நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தினந்தோறும் பொதுமக்கள் பயன்படுத்த முடியும். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் உள்ள நுழைவாயிலினூடாக உட்பிரவேசிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...