நாட்டில் காகிதங்களுக்கு தட்டுப்பாடு!

Date:

நாட்டில் காகிதங்களின் தட்டுப்பாடு காரணமாக தற்போது சகல பத்திரிகைத் தொழிற்துறையினரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் டொலர் தட்டுப்பாடு மற்றும் உலக அளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன இதற்குப் பிரதான காரணங்களாக பத்திரிகைத் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

செய்தித்தாள்களை அச்சிடுவதற்காக பயன்படுத்தப்படும் காகிதங்களின் விலையானது கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு டன் காகிதம் 450 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில் தற்போது 800 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் செய்தித்தாள்களின்‌ உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளதுடன் பத்திரிகை தொழில்துறையினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து...

களனி கங்கை தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கைப் படுகைக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தலை எதிர்வரும்...

மோசமான வானிலை: பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

நிலவிவரும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால்,...