“ஏரோ மெக்சிகோ” ஊழியர்கள் ஏராளமானோருக்கு கொவிட் தொற்று ; 200 விமானங்களின் சேவை ரத்து!

Date:

மெக்சிகோவில் கொவிட் தொற்று அதிகரிப்பால்,சுமார் 200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனால் தொடர்ந்து 4 நாட்களாக விமான நிலையத்திலேயே பயணிகள் தவித்து வருகின்றனர்.

“ஏரோ மெக்சிகோ விமான நிறுவனத்தின் ஊழியர்களில் ஏராளமானோருக்கு தொற்று உறுதியானதால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் அதன் பெரும்பாலான விமானங்களின் சேவை உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால், விமான டிக்கெட் எடுத்தவர்கள் செய்வதறியாது, மெக்சிகோ சிட்டி விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். உரிய நேரத்தில் செல்லாவிட்டால் தனது அமெரிக்க வேலை பறிபோகும், என பெண் ஒருவர் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.மேலும், விமான நிலையத்தில் தங்களுக்கு உணவுக்கு கூட சரியான ஏற்பாடு செய்யப்படவில்லை என பலரும் குற்றம்சாட்டியுள்ளார்கள்.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.reuters.com/world/americas/aeromexico-halts-flights-covid-domino-effect-hits-crews-union-2022-01-07/&ved=2ahUKEwiOjquYxqf1AhXyjOYKHeT1A5kQFnoECAUQAQ&usg=AOvVaw2-9zbvy9k5ldVghpWReMWH

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...