யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் திருவிழா

Date:

NEWS NOW:- யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் திருவிழா கலாநிதி சிதம்பரம் மோகன் தலைமையில் யாழ். நெல்லை ஆதினா மண்டபத்தில் (14) வெகு சிறப்பாக நடைபெற்றது.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மேஜர் ஜெனரல் செனரத் யாபா விசேட அதிதியாகவும் சர்வமதத் தலைவர்கள் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான வண.பிதா கலாநிதி எஸ்.சந்ரு பெர்னாண்டோ ஆசி உரை வழங்கினார்.
வடமாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாணம் இந்தியன் துணை தூதரகத்தின் பதில் தூதுவர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...