ஆப்கானில் பாரிய நிலநடுக்கம்; இதுவரையில் 26 பேர் பலி!

Date:

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு நில நடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட ஈடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானின் மேற்கு மாகாணமான பட்கிஸ்சில் மதியம் 2 மணி மற்றும் மாலை 4 மணிக்குள் அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவு கோலில் அதிகபட்சமாக 5.3 ஆக பதிவானதாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் சரிந்து விழுந்து தரைமட்டமாகின. துர்க்மெனிஸ்தான் நாட்டின் எல்லை வரை அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் அலறி அடித்தபடி ஓடினார்கள்.இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

https://www.aljazeera.com/news/2022/1/17/earthquake-hits-western-afghanistan-killing-more-than-20

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...